சுஜாதா-கேள்வி பதில்

சுஜாதாவிற்கு பதிலா? ஜே.எஸ்.ராகவன் (புரோக்ராம் செய்த ஒரு ரோபோவாக சுவையான விஷயங்களை பூலோகத்தில் எழுதிக் குவித்த வித்தகர் சுஜாதா வைகுண்ட டைம்ஸில் இவ்வாறு பதிலளிப்பாரா? )

கே: விஞ்ஞானத்தின் உதவியுடன் மானிடர்களைப் பதினாறைத் தாண்டாத மார்க்கண்டேயர்களாக மாற்ற முடிந்துவிட்டால் என்னுடயை நிலை என்னாவது? (யமதர்மராஜன், யமலோகம்)

ப: காலன் கலங்க வேண்டாம். படை எடுப்பு, பயங்கர வாதம், வாகனப் புகைகள், பஸ் எரிப்பு, ஓஸோன் ஓட்டை, கலப்படம் போன்றவை உங்களுடைய பாசக் கயிற்றுக்கு வேலை வைக்கும்.

கே: மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி அடைய ஒரு சிறப்புப் பயிற்சி தேவையாமே? அது என்ன? (மேனகா, இந்திர லோகம்)

ப: வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளால் கன்னங்களை எல்.ஐ.சி எம்பிள மாகத் தாங்கி ஊஊஊஊன்னு ஒரு பாட்டம் அழணும். அப்படி அழுது பஞ்ச் வைக்கா விட்டால் சூட்டின கிரீடத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள்!

கே: கையில் சாப்ட்வேர் எதற்கு? சுவடிகள் இருந்தால் போறும் இல்லையா? (சரஸ்வதி, பிரும்ம லோகம்)

ப: Lotusல் உட்கார்ந்து கொண்டுசாப்ட்வேரைப் புறக்கணித்தால் எப்படி?

கே: நாராயணனைத் தூணிலே கண்டவன் நான். ஆனால் துருவன் ரேஞ்சில் பிரபலமாகவில்லையே ஏன்? (மாஸ்டர் பிரகலாதன், வைகுண்டம்

ப: சிம்பிள். துருவனுடைய மேட்டர் பூலோக சினிமாக் களில் நன்றாக ஊறினஅம்மா-அப்பா-சித்தி-சென்டி மென்ட். அதனால் தான் அவன் வடக்கே நிரந்தர ‘ஸ்டார்’ ஆகிட்டான்.

கே: விமானத்திலே சீதையைக் கடத்திண்டு போனதை எதிர்த்து சண்டை போட்ட என்னை ராவணன் சிதைத்தது நியாயமா? ( ஜடாயு, ஆகாசம்)

ப: ஏரோடிரம்மில் வேலையாயிருந்தவன் நான். ஆனாலும் இதை விமானங்கள் எதிர்கொள்ளும் bird hit ஆகக் கருதாமல் ஒரு அரக்கச் செயலாகவே நினைக் கிறேன்.

கே: என்னுடைய ஐயனைப் போல பூலோகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாவது கண் இருந்தால் என்ன ஆகும்? நந்திகேஸ்வரன், கைலாயம்)

ப: (1) எல்லோர் கைகளிலேயும் ஒரு தீயணைப்புக் கருவி தயாராக இருக்கும். (2) மூன்று கண்ணாடிகள் பொருத்திய ஆயுத (எழுத்து)க் கண்ணாடி அணிய வேண்டி வரும். (3) விபூதிச் செலவாணி குறையும்.

கே: தலை கீழாக நின்று முயன்றாலும் என்னால் நேராக நிற்க முடியவில்லையே என்ன செய்ய?(திரிசங்கு ராஜா, அந்தரம்)

ப: அது உங்களுடைய ‘மித்திரர்’ செய்த வேலை! நான் என்ன செய்ய?

கே: காதலர்கள் தினம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? (ரதி-மன்மதன், சொர்க்கபுரி)

ப: தினம் காதலர்களாக இருக்கும் உங்களுக்குக் காதலர் தினம் எதற்கு?

கே: குக்கூ, குக்கூ என்று சப்தமிடும் புறாக்கள் பக்கம்தான் என்னுடைய தராசு சாயும். உங்கள் தராசு?(சிபிச் சக்கரவர்த்தி, வைகுண்டம்)

ப: ஹைக்கூ பக்கம்!

கே: புள்ளின் வாய் கீண்டானை…..என்ற இடத்தில் நிறுத்தி விட்டு…பொல்லா அரக்கனை என்று பாடி நிறுத்தி விட்டு……..கிள்ளிக் களைந்தானை…….என்று பாடுகிறார்களே? கண்ணன் பொல்லா அரக்கனா? இது கொடுமையில்லையா? (ஆண்டாள் நாச்சியார் , வைகுண்டம்)

ப: ஓங்கியுலகளந்த உத்தமன் bare body………. என்றும் ஒருத்தர் பாடுகிறாராமே அந்தக் கொடுமையை விடவா?

நன்றி: ஜே.எஸ்.ராகவன், jsraghavan@gmail.com

Add comment மே 3, 2008

சூரிய உதயம்-தூத்துக்குடி கடற்கறை

விமர்சனம் வரவேற்கப்படுகிறது

Add comment ஏப்ரல் 27, 2008

வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி

வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

(நாகராஜுக்கு அதுபற்றி உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டே பேசினார்). ??அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது? அது எல்லாமே கர்நாடக இடம்தான். எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அங்கே கையை வைக்க வேண்டும்.??

எது உங்கள் இடம் என்கிறீர்கள்? ஒகேனக்கல் பகுதி, தமிழக எல்லைக்குள்தானே வருகிறது?

??அதெப்படிச் சொல்வீர்கள்? தமிழகத்தில் உள்ள தலைவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜம் என்ன தெரியுமா? கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் இத்தனை எதிர்ப்பைக் காட்டுகிறோம்.??

அதற்காக தமிழகத் தலைவர்களின் படத்தை எரிப்பதும், திரையரங்குகளைச் சேதப்படுத்துவதும் சரியானதா?

??என்ன செய்யச் சொல்கிறீர்கள்? கன்னட மொழிப் பற்றாளர்கள் அவர்கள். எங்களைப் போல அவர்கள் பாணியில் போராட்டங்களைச் செய்கின்றனர். அதெல்லாம் வேண்டாம் என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எங்கள் மண் மீது கண் வைக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.??

கர்நாடக மாநில எல்லையைக் கடந்து, நீர் அளவை நிலையத்தைத் தாண்டி அதற்கு அப்பால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான இடத்தையே குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும் போது கர்நாடக மக்களுக்கு எப்படி தண்ணீர் பிரச்னை வரும்?

??அதுதான் ஏற்கெனவே சொன்னேனே. புரியவில்லையா உங்களுக்கு? கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே? நீங்கள் ஒகேனக்கல்லை மறந்து விடுங்கள். நாங்கள் போராட்டத்தை மறந்து விடுகிறோம்.??

கேபிள் ஆபரேட்டர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளீர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே?

??தமிழ் சேனல்களை மட்டும் ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்களும் கூட்டம் போட்டு, உண்ணாவிரத தினத்தில் மட்டும் ஒளிபரப்பைத் தடை செய்து, மற்ற நாட்களில் கலைஞர் சேனலைத் தவிர மற்ற தமிழ் சேனல்களை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்னை தீர்கிறவரை கர்நாடகாவில் கலைஞர் தொலைக்காட்சியை அவர்கள் காட்ட மாட்டார்கள், காட்டவும் முடியாது.??

எதற்காக அந்தக் குறிப்பிட்ட சேனல் மீது இவ்வளவு கோபம்?

??ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தவர் கருணாநிதி. அவருடைய சேனல்தானே அது? அதில் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவாக செய்தியைப் பரப்பி விடுவார்கள். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட சேனலை மட்டும் பிரச்னை தீர்கிறவரை ஒளிபரப்பக்கூடாது என்கிறோம். அதேபோல், கருணாநிதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மத்திய அரசை மிரட்டியே பணிய வைக்கிறார். மத்திய அரசை தனது சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறார். கருணாநிதியை நாடு கடத்த வேண்டும். மத்திய அரசை ஏமாற்றி தமிழகத்துக்குச் சாதகமான எல்லாவற்றையும் வாங்கிவிடுகிறார். அப்படித்தான் மத்திய அரசிடம் ஒகேனக்கல் திட்டத்திலும் ஏமாற்றியிருக்கிறார். இந்தத் திட்டத்தினால் பெங்களூரு மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை வந்துவிடும். அதை கருணாநிதி மூடி மறைத்து விட்டார். கேபிள் ஆபரேட்டர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.??

ஒகேனக்கல் நீரை தமிழக அரசு குடிநீர்த் திட்டத்துக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே பெங்களூரு ஒப்பந்தத்தில் கர்நாடக அரசு கையப்பமிட்டிருக்கிறதே?

??அது பத்து வருடத்துக்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தம். பெங்களூரு குடிநீர்த் திட்டம் என்று ஒன்று வந்த போது, அப்போது தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, மத்திய அரசு அதில் தலையிட்டு, ?காவிரிக்குக் குறுக்கே பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதே வேளையில் ஒகேனக்கல்லில் இருந்து தமிழகம் குடிநீருக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதை நான் மறக்கவில்லை. அப்போது மத்திய அரசு முன்னின்று பஞ்சாயத்துச் செய்து வைத்தது. ஆனால், கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை வைத்துக்கொண்டு கர்நாடகத்திடம் மத்திய அரசு கருத்துக் கூட கேட்டுவிடாமல் தடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார். அது நியாயமா? அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்கிறேன். அதுதான் சரியானது!?? என்று அனல் பறக்க தனது பேட்டியை முடித்துக? கொண்டார் வாட்டாள்

நன்றி :குமுதம் ரிப்போட்டர்

Add comment ஏப்ரல் 11, 2008

எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி

தலைசிறந்த எழுத்தாளரும், விஞ்ஞானியுமான சுஜாதா நேற்று காலமானார்.அவருக்கு வயது 72.
என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர். பலருக்கு கற்றதும் பெற்றதும் வழங்கிய அவர் வாழ்க்கையில் எதையும் ஒரு முறை சாதிக்க வேண்டும் என்ற மனம் படைத்தவர். தனது முதிர்ந்த வயதிலும் இளமை குறையாது எழுதிய அவருக்கு இறைவனின் அழைப்பு இவ்வளவு விரைவில் இருக்கும் என எண்ணவில்லை. தனக்கு பை பாஸ் சர்ஜரி நடந்ததைக் கூட மிக நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் . அவரின் மறைவு தமிழ் எழுத்துலகுக்கும், திரையுலகத்திற்கும், நாடக உலகத்திற்கும், மிகப் பெரிய இழப்பு ஆகும். அவரின் ஆன்மா அவரின் ஆத்மார்த்தமான ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிகளை அடைந்து, நிம்மதி அடைய பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

“Nobody dies; they live in memories and in the genes of their children”

Add comment பெப்ரவரி 28, 2008

இணையதளம் - சில தகவல்கள்

இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது.

உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும்.

கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது.

திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் அளித்துள்ளார்.

லண்டனில் பிறந்த பெர்னர்ஸ்-லீ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குயின்ஸ் கல்லூரியில் பயின்றார். பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டரை பயன்படுத்த லீ-க்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து அவர், தொலைக்காட்சி பெட்டி மற்றும் புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.

இதற்காக சால்டரிங் கருவியைப் பயன்படுத்திய போதுதான் கண்டுபிடிப்புகள் பற்றி யோசிக்கத் துவங்கினார்.

வேர்ல்டு வைடு வெப்-ஐ லீ உருவாக்கும் முன்பாக புரோகிராமர் ஆகவும், சாஃப்ட்வேர் டைப் செட்டிங்கிலும், ஆபரேட்டிங் சிஸ்டம் துறையிலும் கடந்த 1980-களில் அவர் பணி புரிந்துள்ளார்.

ஐரோப்பிய நிறுவனம் ஒன்றில் பெர்னர்ஸ்-லீ பணியாற்றும் போது ஹைபர் டெக்ஸ்ட் அடிப்படையிலான பிராஜக்ட்டின் போது வேர்ல்டு வைடு வெப்-க்கான ஐடியா கிடைத்தது.

தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பங்கீடு செய்து, அப்டேட் செய்யும் வகையிலான புரோட்டோ டைப் சிஸ்டம் என்குயர் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரோகிராம் வெளியிடப்படாவிட்டாலும் வேர்ல்டு வைடு வெப்-க்கான ஆதாரமாக அமைந்தது.

அதன் பிறகு உலகின் முதல் இணைய தளம் (வெப் சைட்) உருவாக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றது, வெப் சர்வருக்கு http என அழைக்கப்பட்டு டிசம்பர் 1990ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது உள்ள வெப் கேமரா போன்ற நவீன வசதிகள் அப்போது அதில் இருந்திருக்கவில்லை.

அதிலிருந்த வேர்ல்டு வைடு வெப் வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கியது. முதல் பெர்னர்ஸ் லீ அட் இன்போ. செம். சிஎச் ஆகஸ்ட் 6-ம் தேதி 1991-ல் ஆன்லைனில் வந்தது.

அதன் பின்னரே வெப் சர்வர்கள் அதிகரிக்கத் துவங்கின. பெர்னர்ஸ் - லீ மற்ற வெப் சைட்களை நிர்வகிக்கத் துவங்கிய போதிலும் தனது வெப் சைட்டே உலகின் முதல் இணைய தளமாக பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இந்த வெப் சைட் புரோகிராமை எந்தவித ராயல்டியும் இல்லாமல் இலவசமாக அவர் வழங்கினார். இதேபோன்ற முடிவை தற்போது பில்கேட்ஸ் எடுப்பாரா எனற கேள்வி எழுகிறது.

தவிர HTML, URL, HTTP போன்ற குறிகளையும் பெர்னர்ஸ்-லீ ஒருங்கிணைத்தார். கடந்த 1994-ல் வேர்ல்டு வைடு கூட்டமைப்பின் பின்னணியிலும், மாசாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அமைப்பையும் ஏற்படுத்தினார்.

தொடர்ந்து முடிந்த, நடப்பு மற்றும் எதிர்கால விஷயங்களை பதிவு செய்யும் வகையில் வீவிங் தி வெப் என்பதன் ஒருங்கிணைப்பாளராக மார்க் பிஷட்டியுடன் சேர்ந்து செயல்பட்டார்.

49 வயதான பெர்னர்ஸ்-லீ வேர்ல்டு வைடு வெப் ஆன்லைனில் செயல்பட அனைத்து வகையிலும் தனது பங்களிப்பை அளித்தார்.

கடந்த 2004, ஜூலை 16ல் பெர்னர்ஸ்-லீ, லண்டனின் அதிதீவிர கமாண்டர் என்ற அந்தஸ்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டன் மன்னரின் உத்தரவுப்படி இரண்டாவது ராணி எலிசபெத், பெர்னர்ஸ்-லீ க்கு இந்த அந்தஸ்தை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பிரிட்டன் மன்னருக்கு அடுத்தபடியான தகுதி இது. தவிர பிரிட்டன் இளவரசரால் ராயல் சொசைட்டி விருதும் லீக்கு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சர் திமோதி பெர்னர்ஸ்-லீ, Knight Commander என்ற நிலையில் அவரை அறிய முடியும்.

டைம் இதழ் வெளியிட்ட அதீத மூளை கொண்டவர்கள் பட்டியலில் பெர்னர்ஸ்-லீயின் பெயர் இடம்பெற்றுள்ளது. தவிர பல்வேறு நாடுகளின் ஏராளமான பெல்லோஷிப் விருதுகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Add comment பெப்ரவரி 24, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

இடைவேளைக்கு முன்: பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்
இடைவேளைக்கு பின்: முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டனை

கொடுமையிலும் கொடுமை…

Add comment பெப்ரவரி 16, 2008

காதலிப்பது எப்படி?


சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.

பசங்களுக்கு:

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!

இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.

இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது…சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி … தானா வரும்.

மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.

நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) “நான் உன்னை காதலிக்கின்றேன்” அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.

நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.

கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..

Pls go to step one.

சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)

பெண்களுக்கு:

பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.

Happy Valentines’s Day மக்கா! இந்த வருஷம் இல்லனா, அடுத்த வருஷமாச்சும், உங்க valentine கூட கொண்டாட வாழ்த்துக்கள்.

-வருத்தப்படாத வாலிபர் சங்கம்

4 comments பெப்ரவரி 13, 2008

புகைப்பட வரிசை

அதிகாலை சூரிய உதயம்

நெசமாலுமே நிலா தானுங்க…

Add comment பெப்ரவரி 10, 2008

சும்மா இருக்க முடியல…

படம் 1.1
ஹைய்யா! ஒரு வழியா ஹார்ட் ஷேப் வந்துடுச்சு….

படம் 1.2

கார்த்திகைக்கு வாங்குன சட்டி திரி மிச்சம் இருந்தது…

Add comment பெப்ரவரி 10, 2008

புகைப்பட போட்டிக்கான படங்கள்

படம் 1
படம் 2

அப்பாடி ஒரு வழியா படம் காட்டியாச்சு….

2 comments பெப்ரவரி 8, 2008

Previous Posts


Categories

Links

Feeds