Archive for பெப்ரவரி, 2008

எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி

தலைசிறந்த எழுத்தாளரும், விஞ்ஞானியுமான சுஜாதா நேற்று காலமானார்.அவருக்கு வயது 72.
என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர். பலருக்கு கற்றதும் பெற்றதும் வழங்கிய அவர் வாழ்க்கையில் எதையும் ஒரு முறை சாதிக்க வேண்டும் என்ற மனம் படைத்தவர். தனது முதிர்ந்த வயதிலும் இளமை குறையாது எழுதிய அவருக்கு இறைவனின் அழைப்பு இவ்வளவு விரைவில் இருக்கும் என எண்ணவில்லை. தனக்கு பை பாஸ் சர்ஜரி நடந்ததைக் கூட மிக நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் . அவரின் மறைவு தமிழ் எழுத்துலகுக்கும், திரையுலகத்திற்கும், நாடக உலகத்திற்கும், மிகப் பெரிய இழப்பு ஆகும். அவரின் ஆன்மா அவரின் ஆத்மார்த்தமான ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிகளை அடைந்து, நிம்மதி அடைய பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

“Nobody dies; they live in memories and in the genes of their children”

Add comment பெப்ரவரி 28, 2008

இணையதளம் – சில தகவல்கள்

இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது.

உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும்.

கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது.

திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் அளித்துள்ளார்.

லண்டனில் பிறந்த பெர்னர்ஸ்-லீ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குயின்ஸ் கல்லூரியில் பயின்றார். பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டரை பயன்படுத்த லீ-க்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து அவர், தொலைக்காட்சி பெட்டி மற்றும் புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.

இதற்காக சால்டரிங் கருவியைப் பயன்படுத்திய போதுதான் கண்டுபிடிப்புகள் பற்றி யோசிக்கத் துவங்கினார்.

வேர்ல்டு வைடு வெப்-ஐ லீ உருவாக்கும் முன்பாக புரோகிராமர் ஆகவும், சாஃப்ட்வேர் டைப் செட்டிங்கிலும், ஆபரேட்டிங் சிஸ்டம் துறையிலும் கடந்த 1980-களில் அவர் பணி புரிந்துள்ளார்.

ஐரோப்பிய நிறுவனம் ஒன்றில் பெர்னர்ஸ்-லீ பணியாற்றும் போது ஹைபர் டெக்ஸ்ட் அடிப்படையிலான பிராஜக்ட்டின் போது வேர்ல்டு வைடு வெப்-க்கான ஐடியா கிடைத்தது.

தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பங்கீடு செய்து, அப்டேட் செய்யும் வகையிலான புரோட்டோ டைப் சிஸ்டம் என்குயர் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரோகிராம் வெளியிடப்படாவிட்டாலும் வேர்ல்டு வைடு வெப்-க்கான ஆதாரமாக அமைந்தது.

அதன் பிறகு உலகின் முதல் இணைய தளம் (வெப் சைட்) உருவாக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றது, வெப் சர்வருக்கு http என அழைக்கப்பட்டு டிசம்பர் 1990ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது உள்ள வெப் கேமரா போன்ற நவீன வசதிகள் அப்போது அதில் இருந்திருக்கவில்லை.

அதிலிருந்த வேர்ல்டு வைடு வெப் வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கியது. முதல் பெர்னர்ஸ் லீ அட் இன்போ. செம். சிஎச் ஆகஸ்ட் 6-ம் தேதி 1991-ல் ஆன்லைனில் வந்தது.

அதன் பின்னரே வெப் சர்வர்கள் அதிகரிக்கத் துவங்கின. பெர்னர்ஸ் – லீ மற்ற வெப் சைட்களை நிர்வகிக்கத் துவங்கிய போதிலும் தனது வெப் சைட்டே உலகின் முதல் இணைய தளமாக பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இந்த வெப் சைட் புரோகிராமை எந்தவித ராயல்டியும் இல்லாமல் இலவசமாக அவர் வழங்கினார். இதேபோன்ற முடிவை தற்போது பில்கேட்ஸ் எடுப்பாரா எனற கேள்வி எழுகிறது.

தவிர HTML, URL, HTTP போன்ற குறிகளையும் பெர்னர்ஸ்-லீ ஒருங்கிணைத்தார். கடந்த 1994-ல் வேர்ல்டு வைடு கூட்டமைப்பின் பின்னணியிலும், மாசாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அமைப்பையும் ஏற்படுத்தினார்.

தொடர்ந்து முடிந்த, நடப்பு மற்றும் எதிர்கால விஷயங்களை பதிவு செய்யும் வகையில் வீவிங் தி வெப் என்பதன் ஒருங்கிணைப்பாளராக மார்க் பிஷட்டியுடன் சேர்ந்து செயல்பட்டார்.

49 வயதான பெர்னர்ஸ்-லீ வேர்ல்டு வைடு வெப் ஆன்லைனில் செயல்பட அனைத்து வகையிலும் தனது பங்களிப்பை அளித்தார்.

கடந்த 2004, ஜூலை 16ல் பெர்னர்ஸ்-லீ, லண்டனின் அதிதீவிர கமாண்டர் என்ற அந்தஸ்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டன் மன்னரின் உத்தரவுப்படி இரண்டாவது ராணி எலிசபெத், பெர்னர்ஸ்-லீ க்கு இந்த அந்தஸ்தை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பிரிட்டன் மன்னருக்கு அடுத்தபடியான தகுதி இது. தவிர பிரிட்டன் இளவரசரால் ராயல் சொசைட்டி விருதும் லீக்கு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சர் திமோதி பெர்னர்ஸ்-லீ, Knight Commander என்ற நிலையில் அவரை அறிய முடியும்.

டைம் இதழ் வெளியிட்ட அதீத மூளை கொண்டவர்கள் பட்டியலில் பெர்னர்ஸ்-லீயின் பெயர் இடம்பெற்றுள்ளது. தவிர பல்வேறு நாடுகளின் ஏராளமான பெல்லோஷிப் விருதுகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Add comment பெப்ரவரி 24, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

இடைவேளைக்கு முன்: பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்
இடைவேளைக்கு பின்: முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டனை

கொடுமையிலும் கொடுமை…

Add comment பெப்ரவரி 16, 2008

காதலிப்பது எப்படி?


சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.

பசங்களுக்கு:

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!

இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.

இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது…சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி … தானா வரும்.

மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.

நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) “நான் உன்னை காதலிக்கின்றேன்” அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.

நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.

கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..

Pls go to step one.

சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)

பெண்களுக்கு:

பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.

Happy Valentines’s Day மக்கா! இந்த வருஷம் இல்லனா, அடுத்த வருஷமாச்சும், உங்க valentine கூட கொண்டாட வாழ்த்துக்கள்.

-வருத்தப்படாத வாலிபர் சங்கம்

2 comments பெப்ரவரி 13, 2008

புகைப்பட வரிசை

அதிகாலை சூரிய உதயம்

நெசமாலுமே நிலா தானுங்க…

Add comment பெப்ரவரி 10, 2008

சும்மா இருக்க முடியல…

படம் 1.1
ஹைய்யா! ஒரு வழியா ஹார்ட் ஷேப் வந்துடுச்சு….

படம் 1.2

கார்த்திகைக்கு வாங்குன சட்டி திரி மிச்சம் இருந்தது…

Add comment பெப்ரவரி 10, 2008

புகைப்பட போட்டிக்கான படங்கள்

படம் 1
படம் 2

அப்பாடி ஒரு வழியா படம் காட்டியாச்சு….

2 comments பெப்ரவரி 8, 2008

வரம் கேட்கிறேன்

வரம் கேட்கிறேன்!
வேறென்ன கேட்பேன்
பராசக்தி!
வில்லங்கம் எதுவுமில்லா
காணி நிலம்
அதில்
தீப்பிடிக்காத
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை!
அடைப்பில்லாத
ட்ரைனேஜ் கனெக் ஷன்!
வைரஸ் வராத
கம்ப்யூட்டர்
விளையாடி மகிழ
வெப்சைட்
சரியான முகவரியோடு
எலெக் ஷன் கார்டு
பக்கவிளைவில்லா
பாஸ்ட் புட் அயிட்டங்கள்
மறக்காமல் கொஞ்சம்
மினரல் வாட்டர்!
வேறென்ன கேட்பேன்
பராசக்தி
இவை யாவும் தரும் நாளில்
அதிர்ச்சியில்
இறக்காமல் இருக்க
கொஞ்சம் ஆயுள்.

எம்.ஜி.கன்னியப்பன் – என் நந்தவனத்துப் பட்டாம்பூச்சிகள்

அட இப்படியும் கவிதை எழுத முடியுமா!…

Add comment பெப்ரவரி 7, 2008

உசேலே உசேலே…

இந்த பாடல் ஆல்பமாக வெளிவந்த போது நான் பெரும்பாலும் இதை தான் கேட்டுக்கொண்டிருப்பேன். இது பழைய ராமராஜன் படத்தில் வரும் ‘சொர்க்கமே என்றாலும் அது நம்ம் ஊர் போல வருமா’ என்ற பாடலை நினைவுப்படுத்துகிறது. இப்போதுள்ள fast beat, புது பாடகர்கள் எல்லாம் சேர்த்து மிகவும் அருமையாக பாடியிருக்கிறார்கள். நீங்களும் கேட்டுப் பாடி பாருங்கள்.

Get this widget Track details eSnips Social DNA

உசேலே உசேலே…

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
மாட்டு மணிச் சத்தம்
மல்லிகைப்பூவாசம்
கைத்தறி கண்காட்சி
சந்தக் கடைவீதி
தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்

இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

பூ உண்டு பூ உண்டு ஆளான பெண் உண்டு
பூ சூடும் பெண் இல்ல ஃபாரினுல
பாவாடை தாவணி குங்குமம் கால் மெட்டி
பார்த்துட்டே வாழலாம் நம்மூருல
நம்மோட நெழலும் தான் சாலை மேல் விழுதுன்னா
அபராதம் கேக்குறான் ஃபாரினுலே
தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்
கேட்பாரே இல்லயே நம்மூரூல

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

நம்மூரு வண்டி வச்சு வண்டி பூரா உட்கார்ந்து
உண்ணும் சுகம் அடடா
வேகாத ரொட்டி வெச்சு வேளைக்கு ரெண்டு
திண்பான் ஃபாரினுல ஐயையோ
ஆண்டிப்பட்டியில் சேவல் சண்டைக்கு
ஃபாக்ஸிங் ஈடில்லையே

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

சைக்கிள் பெல்லின் சங்கீதம்
மொட்டைமாடி காற்றாடி
ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்பம் இன்பம்
கம்புச்சண்டை கரகாட்டம்
கோயில் குளம் கற்பூரம்
பொங்கல் தல தீபாவளி இன்பம் இன்பம்
தண்ணிக் கொடம் சண்டையும்
பானை மோரும் பண்ணீரும்
ஜன்னலில்லா பேருந்தும் இன்பம் இன்பம்

தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்

இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல

நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
எங்கும் பச்சைப்பசேலே

உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே…
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல

ஆல்பம் : உசேலே
பாடல் : உசேலே உசேலே
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், டிம்மி, கார்த்திக் & திப்பு
பாடல் வரிகள் : பா.விஜய்

Add comment பெப்ரவரி 4, 2008

இது தான் Google

Add comment பெப்ரவரி 3, 2008

Previous Posts


Calendar

பெப்ரவரி 2008
தி செ பு வி வெ ஞா
« Jan   ஏப் »
 123
45678910
11121314151617
18192021222324
2526272829  

Posts by Month

Posts by Category