Posts filed under ‘புதிது’
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, ‘எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்’ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் ‘ஏம்மா…எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க…நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே’ன்னு கேட்டதுக்கு, ‘கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்’னு சொன்னாங்களாம்.
உலகில் நான்குவிதமான பக்தர்கள் இருப்பதாக கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார் – ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி என்று அவர்களைப் பற்றி சொல்வார். ஆர்த்தி என்பவர்கள் தங்கள் குறைகளைக் கூறி துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்று வணங்குபவர்கள். அர்த்தார்த்தி என்பவர்கள் பொருளை விரும்பி வேண்டி வணங்குபவர்கள். ஜிக்ஞாஸு என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுதலை பெற வேண்டி வணங்குபவர்கள். ஞானி என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு உண்மை நிலையில் உருவமான இறைவனை வணங்குபவர்கள். தற்போது நம் கண்களுக்குத் தெரியும் பக்தர்களில் முதலில் சொல்லியிருக்கும் இரண்டுவிதமான பக்தர்களையே அதிகம் காண்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும் போது ‘குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ என்ற பாடலைக் கேட்கும் போது வித்தியாசமாக இல்லை?
இந்தப் பாட்டுல ‘நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல’ அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார். மொதல்ல பாட்டை முழுசா குடுத்துட்றேன். அப்புறம் வரிகளோட அர்த்தம் பார்க்கலாம்.
அறை எண் 305 கடவுள்-ஹரிணி-குறை ஒன்றும் இல்லை
கத்ரி கோபால்நாத்: http://www.musicindiaonline.com/p/x/VJO02eAp3t.As1NMvHdW/
மாலா சந்திரசேகர்: http://www.musicindiaonline.com/p/x/.4K0tGu5K9.As1NMvHdW/
M S சுப்புலஷ்மி: http://www.musicindiaonline.com/p/xx/vJf2B5P_2S.As1NMvHdW/
பாடல்: இராஜாஜி
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா –
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா – உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா.
விளக்கம்:
வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா…எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.
எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா…அதனால் என்ன…நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு…அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர…வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா…நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா…திருமலையில் நிற்கும் என் அப்பா…என்னைக் காப்பவனே கோவிந்தா…
மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா…உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்…என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா…நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்…அது போதும் எனக்கு…நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…
வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது… அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்… அழகிய சுருள்முடியை உடைய கேஸவா… மலையப்பா…நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை…உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது…நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்…ஆனால் அன்னையோ அப்படி அல்ல…அவள் கருணைக்கடல்…என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்…அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா… மணிவண்ணா… மலையப்பா… கோவிந்தா…கோவிந்தா….
சுஜாதா-கேள்வி பதில்
சுஜாதாவிற்கு பதிலா? ஜே.எஸ்.ராகவன் (புரோக்ராம் செய்த ஒரு ரோபோவாக சுவையான விஷயங்களை பூலோகத்தில் எழுதிக் குவித்த வித்தகர் சுஜாதா வைகுண்ட டைம்ஸில் இவ்வாறு பதிலளிப்பாரா? )
கே: விஞ்ஞானத்தின் உதவியுடன் மானிடர்களைப் பதினாறைத் தாண்டாத மார்க்கண்டேயர்களாக மாற்ற முடிந்துவிட்டால் என்னுடயை நிலை என்னாவது? (யமதர்மராஜன், யமலோகம்)
ப: காலன் கலங்க வேண்டாம். படை எடுப்பு, பயங்கர வாதம், வாகனப் புகைகள், பஸ் எரிப்பு, ஓஸோன் ஓட்டை, கலப்படம் போன்றவை உங்களுடைய பாசக் கயிற்றுக்கு வேலை வைக்கும்.
கே: மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி அடைய ஒரு சிறப்புப் பயிற்சி தேவையாமே? அது என்ன? (மேனகா, இந்திர லோகம்)
ப: வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளால் கன்னங்களை எல்.ஐ.சி எம்பிள மாகத் தாங்கி ஊஊஊஊன்னு ஒரு பாட்டம் அழணும். அப்படி அழுது பஞ்ச் வைக்கா விட்டால் சூட்டின கிரீடத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள்!
கே: கையில் சாப்ட்வேர் எதற்கு? சுவடிகள் இருந்தால் போறும் இல்லையா? (சரஸ்வதி, பிரும்ம லோகம்)
ப: Lotusல் உட்கார்ந்து கொண்டுசாப்ட்வேரைப் புறக்கணித்தால் எப்படி?
கே: நாராயணனைத் தூணிலே கண்டவன் நான். ஆனால் துருவன் ரேஞ்சில் பிரபலமாகவில்லையே ஏன்? (மாஸ்டர் பிரகலாதன், வைகுண்டம்
ப: சிம்பிள். துருவனுடைய மேட்டர் பூலோக சினிமாக் களில் நன்றாக ஊறினஅம்மா-அப்பா-சித்தி-சென்டி மென்ட். அதனால் தான் அவன் வடக்கே நிரந்தர ‘ஸ்டார்’ ஆகிட்டான்.
கே: விமானத்திலே சீதையைக் கடத்திண்டு போனதை எதிர்த்து சண்டை போட்ட என்னை ராவணன் சிதைத்தது நியாயமா? ( ஜடாயு, ஆகாசம்)
ப: ஏரோடிரம்மில் வேலையாயிருந்தவன் நான். ஆனாலும் இதை விமானங்கள் எதிர்கொள்ளும் bird hit ஆகக் கருதாமல் ஒரு அரக்கச் செயலாகவே நினைக் கிறேன்.
கே: என்னுடைய ஐயனைப் போல பூலோகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாவது கண் இருந்தால் என்ன ஆகும்? நந்திகேஸ்வரன், கைலாயம்)
ப: (1) எல்லோர் கைகளிலேயும் ஒரு தீயணைப்புக் கருவி தயாராக இருக்கும். (2) மூன்று கண்ணாடிகள் பொருத்திய ஆயுத (எழுத்து)க் கண்ணாடி அணிய வேண்டி வரும். (3) விபூதிச் செலவாணி குறையும்.
கே: தலை கீழாக நின்று முயன்றாலும் என்னால் நேராக நிற்க முடியவில்லையே என்ன செய்ய?(திரிசங்கு ராஜா, அந்தரம்)
ப: அது உங்களுடைய ‘மித்திரர்’ செய்த வேலை! நான் என்ன செய்ய?
கே: காதலர்கள் தினம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? (ரதி-மன்மதன், சொர்க்கபுரி)
ப: தினம் காதலர்களாக இருக்கும் உங்களுக்குக் காதலர் தினம் எதற்கு?
கே: குக்கூ, குக்கூ என்று சப்தமிடும் புறாக்கள் பக்கம்தான் என்னுடைய தராசு சாயும். உங்கள் தராசு?(சிபிச் சக்கரவர்த்தி, வைகுண்டம்)
ப: ஹைக்கூ பக்கம்!
கே: புள்ளின் வாய் கீண்டானை…..என்ற இடத்தில் நிறுத்தி விட்டு…பொல்லா அரக்கனை என்று பாடி நிறுத்தி விட்டு……..கிள்ளிக் களைந்தானை…….என்று பாடுகிறார்களே? கண்ணன் பொல்லா அரக்கனா? இது கொடுமையில்லையா? (ஆண்டாள் நாச்சியார் , வைகுண்டம்)
ப: ஓங்கியுலகளந்த உத்தமன் bare body………. என்றும் ஒருத்தர் பாடுகிறாராமே அந்தக் கொடுமையை விடவா?
நன்றி: ஜே.எஸ்.ராகவன், jsraghavan@gmail.com
உசேலே உசேலே…
இந்த பாடல் ஆல்பமாக வெளிவந்த போது நான் பெரும்பாலும் இதை தான் கேட்டுக்கொண்டிருப்பேன். இது பழைய ராமராஜன் படத்தில் வரும் ‘சொர்க்கமே என்றாலும் அது நம்ம் ஊர் போல வருமா’ என்ற பாடலை நினைவுப்படுத்துகிறது. இப்போதுள்ள fast beat, புது பாடகர்கள் எல்லாம் சேர்த்து மிகவும் அருமையாக பாடியிருக்கிறார்கள். நீங்களும் கேட்டுப் பாடி பாருங்கள்.
|
உசேலே உசேலே…
உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
மாட்டு மணிச் சத்தம்
மல்லிகைப்பூவாசம்
கைத்தறி கண்காட்சி
சந்தக் கடைவீதி
தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்
இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல
உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
பூ உண்டு பூ உண்டு ஆளான பெண் உண்டு
பூ சூடும் பெண் இல்ல ஃபாரினுல
பாவாடை தாவணி குங்குமம் கால் மெட்டி
பார்த்துட்டே வாழலாம் நம்மூருல
நம்மோட நெழலும் தான் சாலை மேல் விழுதுன்னா
அபராதம் கேக்குறான் ஃபாரினுலே
தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்
கேட்பாரே இல்லயே நம்மூரூல
உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
நம்மூரு வண்டி வச்சு வண்டி பூரா உட்கார்ந்து
உண்ணும் சுகம் அடடா
வேகாத ரொட்டி வெச்சு வேளைக்கு ரெண்டு
திண்பான் ஃபாரினுல ஐயையோ
ஆண்டிப்பட்டியில் சேவல் சண்டைக்கு
ஃபாக்ஸிங் ஈடில்லையே
உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
சைக்கிள் பெல்லின் சங்கீதம்
மொட்டைமாடி காற்றாடி
ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்பம் இன்பம்
கம்புச்சண்டை கரகாட்டம்
கோயில் குளம் கற்பூரம்
பொங்கல் தல தீபாவளி இன்பம் இன்பம்
தண்ணிக் கொடம் சண்டையும்
பானை மோரும் பண்ணீரும்
ஜன்னலில்லா பேருந்தும் இன்பம் இன்பம்
தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்
இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல
நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
எங்கும் பச்சைப்பசேலே
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே…
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
ஆல்பம் : உசேலே
பாடல் : உசேலே உசேலே
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், டிம்மி, கார்த்திக் & திப்பு
பாடல் வரிகள் : பா.விஜய்
வலைப்பதிவின் வரலாறு
இந்தத் தகவல்களை நான் இணையத்தில் இருந்து எடுத்தேன். இது சரி தானா என்று படிப்பவர்கள் சொல்லலாம்.
* Weblog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 ல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.
* குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் Weblog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.
* 1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.
* 1996 இல் ‘Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டிவிட்டது.
* ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.
* ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.