வரம் கேட்கிறேன்
பிப்ரவரி 7, 2008 at 6:30 முப பின்னூட்டமொன்றை இடுக
வரம் கேட்கிறேன்!
வேறென்ன கேட்பேன்
பராசக்தி!
வில்லங்கம் எதுவுமில்லா
காணி நிலம்
அதில்
தீப்பிடிக்காத
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை!
அடைப்பில்லாத
ட்ரைனேஜ் கனெக் ஷன்!
வைரஸ் வராத
கம்ப்யூட்டர்
விளையாடி மகிழ
வெப்சைட்
சரியான முகவரியோடு
எலெக் ஷன் கார்டு
பக்கவிளைவில்லா
பாஸ்ட் புட் அயிட்டங்கள்
மறக்காமல் கொஞ்சம்
மினரல் வாட்டர்!
வேறென்ன கேட்பேன்
பராசக்தி
இவை யாவும் தரும் நாளில்
அதிர்ச்சியில்
இறக்காமல் இருக்க
கொஞ்சம் ஆயுள்.
எம்.ஜி.கன்னியப்பன் – என் நந்தவனத்துப் பட்டாம்பூச்சிகள்
அட இப்படியும் கவிதை எழுத முடியுமா!…
Entry filed under: கவிதை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed